ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கும் சாலை

Update: 2024-09-01 17:32 GMT

மொரப்பூர் ஒன்றியம் நவலை அருகே செங்குட்டைமேடு முதல் பெரமாண்டப்பட்டி வரை தார்சாலை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலையில் தற்போது ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் இந்த சாலையில் சிறுசிறு விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவி சங்கர், நவலை.

மேலும் செய்திகள்