புளியமரம் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2024-09-01 17:30 GMT

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சாலையோரம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் உள்ளது. இந்த மரமானது வேர், கிளைகள் பலமிழந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதனருகே மின்கம்பம், வணிக நிறுவனங்கள் உள்ளதுடன், அவ்வழியாக ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் விபத்து ஏற்படும் முன் பழமை வாய்ந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்ரமணி, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்