குண்டும், குழியுமான சாலை

Update: 2024-08-18 17:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து உழவர் சந்தை நோக்கி செல்லும் சாலை நீண்ட நாட்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், ஓசூர்.

மேலும் செய்திகள்