அகற்றப்பட்ட வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-07-21 18:16 GMT

ராசிபுரம்-திருச்செங்கோடு மெயின் ரோட்டில் பாலப்பாளையம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்க பணியின்போது ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடையை அவசியம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கோகுல கிருஷ்ணன், பாலப்பாளையம்.

மேலும் செய்திகள்