பல்லாங்குழி சாலை

Update: 2024-07-07 17:49 GMT

தேன்கனிக்கோட்டை சாரகப்பள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து இந்த பகுதி சாலையை சீரமைத்து தர வேண்டும்.

-ஈஸ்வரன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்