குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-07 17:47 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலூர் சாலையில் இருந்து பிருந்தாவன் நகர் 7-வது பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கற்கள் பெயர்ந்து சாலை பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை, பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத நிலையில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை விரைந்து சீரமைத்து கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

-பாலமுருகன், ஓசூர்.

மேலும் செய்திகள்