குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 17:53 GMT

சேலம் மாவட்டம் தேவூரில் இருந்து பிரிந்து காவேரிபட்டிக்கு செல்லும் சாலையில் சரபங்கா நதி பாலம் அருகே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், தேவூர்.

மேலும் செய்திகள்