குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 17:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ரகமத்காலனி போலீஸ் நிலையம் முதல் விநாயகர் கோவில் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு முழுவதும் போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதி சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும்.

-சக்கரபாணி, ரகமத்காலனி.

மேலும் செய்திகள்