தோண்டிய பள்ளத்தை மூடலாமே!

Update: 2024-06-23 17:54 GMT

சேலம் இரும்பாலை புதுரோடு முத்துநாய்க்கன்பட்டி பிரிவு சாலையில் சமீபத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைகின்றன. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதி சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!

-வெங்கடாசலம், சுந்தர்நகர்.

மேலும் செய்திகள்