வேகத்தடை வேண்டும்

Update: 2024-06-16 17:22 GMT

கொல்லிமலைக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 65 கொண்டை ஊசி வளைவுகளை கடந்த பின்பு சோளக்காடு வளைவு பகுதியில் நாச்சியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் வழியிலேயே வாகனத்தை நிறுத்தி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த பகுதி பிரதான சாலையாக இருப்பதால் கோவிலுக்கு செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த கோவில் வளைவு பகுதியில் வேகத்தடை அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

-சுந்தரம், கொல்லிமலை.

மேலும் செய்திகள்