சேதமடைந்த சாலை

Update: 2024-06-02 17:14 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஆத்துமேட்டில் இருந்து அத்திமுட்லு -அகரம் செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த பகுதி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றன. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிர்வேல், அத்திமுட்லு.

மேலும் செய்திகள்