சேறும், சகதியுமான சாலை

Update: 2024-06-02 10:40 GMT

கோவை ஒண்டிபுதூர் ருக்மணி கார்டன் வீதியில் மிதமான மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுகிறது. ஏற்கனவே பெய்த மழையில் தண்ணீர் தேங்கி இன்னும் வடியாமல் உள்ளது. அதோடு இங்குள்ள சாலையும் மண்சாலை என்பதால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு தார்சாலை அமைப்பதோடு மழைநீர் தேங்காமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்