சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2024-06-02 10:40 GMT

கோவை மாநகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியம்பாளையத்தில் தடாகம் செல்லும் சாலையின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தால் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அதுவும், இரவு நேரத்தில் அதிக விபத்து நடைபெறுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க இனிமேலாவது அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்