சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

Update: 2024-05-26 17:07 GMT

தர்மபுரி நகரின் மையப் பகுதியில் சுந்தரம் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் உள்ள சாலையில் வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையின் இருபுறங்களிலும் பெரும் பகுதியை ஆக்கிரமித்தபடி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், முறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, தர்மபுரி.

மேலும் செய்திகள்