குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-26 17:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள தென்றல் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தாமதமின்றி தார்சாலை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்