வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-05-26 11:11 GMT

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்ய சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை முடிக்கவில்லை. அதோடு குழியையும் மூடாமல் அப்படியே வைத்திருப்பதால், அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பணியை விரைந்து முடித்து குழியை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்