பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2024-05-05 12:50 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை பெயர்ந்து காணப்படுகிறது. அங்கு ஆபத்தான குழிகள் ஏற்பட்டு உள்ளன. அந்த குழிகளில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லவே பலரும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அந்த குழிகளை மூடி கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்