தடுப்பு கம்பிகள் சரி செய்யப்படுமா?

Update: 2024-04-28 17:56 GMT

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தடுப்பு கம்பிகள் சரிந்து கீழே விழந்து கிடக்கின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் நடைபாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்கின்றனர். எனவே, நடைபாதையில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கீழே விழுந்து கிடக்கும் தடுப்பு கம்பியை சரி செய்து வாகன ஓட்டிகள் செல்லாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வருண், சேலம்.

மேலும் செய்திகள்