சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்

Update: 2024-04-28 17:37 GMT

தர்மபுரி குமாரசாமிபேட்டை பிரதான நெடுஞ்சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களில் சமீபகாலமாக அதிகளவில் கம்பிகள் ஏற்றி செல்லப்படுகின்றன. உரிய பாதுகாப்பின்றி ஆபத்தான முறையில் ஏற்றி செல்லப்படும் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கம்பிகள் மற்றும் அதிகளவில் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், தர்மபுரி

மேலும் செய்திகள்