தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-04-28 16:00 GMT

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி பழனியாண்டவர் நகரில் சில இடங்களில் சாலை வசதி இல்லாமல் மண்பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதேபோல் மண்பாதையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணலில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே அந்த பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்