அடிக்கடி விபத்து

Update: 2024-04-28 15:45 GMT

 அந்தியூர் அருகே சங்கராபாளையம் சுமைதாங்கி பகுதியில் இருந்து குருநாதசாமி வனக்கோவில் செல்லும் பாதை மிகவும் பழுதடைந்துள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஜல்லிகளில் பட்டு தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஜல்லிகற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்