வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2024-03-31 11:01 GMT

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கம்பிகளில் ஒரு பகுதி உடைந்து சாலையில் சரிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது. எனவே சாலையின் நடுவில் உள்ள கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்