வடக்கு தாமரைகுளம் ஊரில் ஒரு குளம் அமைந்துள்ளது. இக்குளம் மிகவும் அழகமானது. இந்த குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குளத்தில் அருகில் சாலையோரத்தில் "இது ஆழமான பகுதி, வாகனங்கள் கவனமாக செல்லவும்" என எச்சரிக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தின் கரையோரத்தில் விபத்து தடுப்பு இரும்பு வேலி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேசு செல்வ பெரோஸ்மின், தென்தாமரைகுளம்.