சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-03-17 17:17 GMT

கிருஷ்ணகிரி நகராட்சியையொட்டி தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. சென்னை, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. இந்த பகுதியில் கால்நடைகள் திடீரென்று வாகனங்களின் குறுக்கே வருவதால் விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைகிறார்கள். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-பிரவீன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்