வேகத்தடைகள் பராமரிக்கப்படுமா?

Update: 2024-03-03 17:18 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் குந்தாரப்பள்ளி வாரச்சந்தை அருகிலும், ராமாபுரம் உள்பட பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. குறிப்பாக வேகத்தடை இருப்பதே தெரியாத அளவிற்கு உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வரக்கூடிய பலரும் வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே வேப்பனப்பள்ளி சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், குந்தாரப்பள்ளி.

மேலும் செய்திகள்