நடுரோட்டில் குழி

Update: 2024-03-03 12:54 GMT

கணபதி சத்தி சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் நடுரோட்டில் குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காலையிலும், மாலையிலும் மாணவ-மாணவிகளுடன் பெற்றோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த குழியை உடனடியாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்