வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-02-25 17:22 GMT

நாமக்கல் அருகே புதன்சந்தையில் இருந்து செல்லப்பம்பட்டி வருவதற்கு சர்வீஸ் சாலை உள்ளது. அதில் புதியதாக 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படவில்லை. இரவில் வரும் இருசக்கர வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குழந்தைவேல், செல்லப்பம்பட்டி.

மேலும் செய்திகள்