சேறும், சகதியுமான சாலை

Update: 2024-02-25 17:19 GMT

சங்ககிரி வட்டம் ஏகாம்பரம் கிராமத்தில் பண்டிதகாரனூர் உள்ளது. இந்த ஊரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சரியான சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஊருக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பகுதியில் தார் சாலை இல்லாததால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே விரைவில் சாலை அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா? அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-சங்கர், சங்ககிரி.

மேலும் செய்திகள்