சுகாதாரமான குடிநீர் வேண்டும்

Update: 2024-02-25 15:34 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிக்கு அடியில் சாக்கடை கால்வாயில் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குழந்தைவேலு, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்