குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-11 17:17 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து மதியம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மதியம்பட்டி ஏரியில் இருந்து சவுரிபாளையம் வரும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிலசமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சக்திவேல், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்