விபத்து அபாயம்

Update: 2024-02-11 17:15 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி-தம்மம்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் சாக்கடை கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், சேலம்.

மேலும் செய்திகள்