சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-04 12:04 GMT

பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அரசு உண்டு உறைவிட பள்ளி வழியாக மாங்கம்வயல் பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் உள்ள குழிகளில், மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். அதோடு வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. மேலும் பாதசாரிகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்