குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-28 12:13 GMT

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பயணிகள் நிழற்குடை முதல் குடியிருப்புகள் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால், அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்