சாலையை சீரமைக்கலாமே!

Update: 2024-01-14 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் பணிகள் முடிந்தும், சாலை சீரமைக்கப்படாமல் ஜல்லிகற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டும்.

- சரவணன், மாரண்டஅள்ளி

மேலும் செய்திகள்