கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-01-07 17:32 GMT

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகரில் சாலையில் ஜல்லிகற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன. ஒரு வாரம் ஆகியும் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்