குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-07 14:35 GMT

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி பகுதியில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில், காய்கறி மார்க்கெட் முன்பு உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கருணா, ஓசூர்.

மேலும் செய்திகள்