சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை

Update: 2023-12-24 17:34 GMT

நாமக்கல்- மோகனூர் சாலையில் இருந்து சிங்கிலிபட்டி கிராமத்துக்கு செல்லும் பாதையில் தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்