குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-24 12:50 GMT

கிணத்துக்கடவில் இருந்து வேலந்தாவளம் செல்லும் சாலையானது சிங்கையன்புதூர் பகுதியில் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மழை பெய்யும்போது, அங்குள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக நடந்து வருபவர்களும், இருசக்கர வாகனங்களில் வருபவர்களும் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்