விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2023-12-17 12:25 GMT

கோவை கணபதி சத்தி சாலையில் இருந்து அத்திப்பாளையம் சாலை வழியாக சின்னவேடம்பட்டி நால்ரோடு வரை ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு கரடு, முரடாக சாலை காட்சி அளிக்கிறது. இந்த குழிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகின்றன. அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மழை பெய்துவிட்டால் அந்த சாலை மேலும் மோசமாகி விடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்