ஆபத்தான பள்ளம்

Update: 2023-12-10 16:37 GMT

ஓசூர் ஏரித்தெருவில் அம்மா உணவகம் எதிரே சாலையோரம் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் அதில் விழும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து பள்ளத்தை உடனடியாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, ஓசூர்.

மேலும் செய்திகள்