ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

Update: 2023-11-26 17:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் நுழைவுவாயிலை ஆக்கிரமித்து கடைகள் இருப்பதால் பள்ளி மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஜெயசூர்யா, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்