சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-11-26 10:09 GMT

நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி தெருவில் உள்ள சாலைகள் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரினால் மாணவ-மாணவிகள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்