சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-11-05 10:23 GMT

நாகையை அடுத்த வெளிப்பாளையம் சிவன் கோவில் சன்னதி தெரு ௮ங்கன்வாடி கட்டிடம் அருகே மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் வடிவதற்கு வழியின்றி சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் அதிகளவில் உருவாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்து சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்