சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-08 17:12 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி வழியாக பென்னாகரம் செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-கலைமகள், ஏரியூர்.

மேலும் செய்திகள்