சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-04 13:23 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலை வயல் கிராமத்தில் மணல்மேடு சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாய் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்