ஆபத்தான சாலை

Update: 2023-10-01 17:13 GMT

சேலம் எருமாபாளையம் ஊராட்சி 12-வது வார்டு பனங்காடு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து பெருமாள் கோவில் கரடு செல்லும் சாலை ஆரம்பத்தில் உயரம் சுமார் 10 அடி மேடாகவும், திடீர் இறக்கமாகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தடுப்புச்சுவர் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும், மேலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்