ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை

Update: 2025-06-01 19:33 GMT

அரக்கோணம் ரெயில் நிலையம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் மசூதி தெருவில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்கும், பத்திரப் பதிவாளர் அலுவலகத்துக்கும் வருபவர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் சாலை குறுகி விட்டது. ரெயில் நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்