வேலூர் கொசப்பேட்டை செல்வகணேசர் கோவில் முன்புள்ள தெருவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் கால்வாயில் உள்ள சேறு, சகதிகள் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாயவன், வேலூர்.