சேறும் சகதியுமான சாலை

Update: 2023-12-03 17:38 GMT

அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் ஊராட்சி பாட்டை வீதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்கும்படி ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், மகமதுபுரம்.

மேலும் செய்திகள்