நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2023-02-22 15:50 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிமெண்டு சிலாப் நடைபாதையில் வாகன ஓட்டிகள் தங்களின் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் ஒரு சிலர் சாலையில் நடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் நிறுத்தி வைத்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்